அறிந்திருக்க வேண்டியவை

தூக்கத்தில் நடப்பவர்களுக்கு என்ன நடக்கும்…??

தூக்கத்தில் நடக்கும் பழக்கம் துயில் நடை என்று சொல்வார்கள். தூங்கிக் கொண்டிருக்கும்போது படுக்கையில் இருந்து எழுந்து தன் உணர்வின்றி நடப்பது, பெரும்பாலும் தூங்க ஆரம்பித்த முதல் சில மணிகளிலேயே இது நடைபெறுகிறது. ஒவ்வொரு முறையும் இவர்கள் வெற்றுப்பார்வையுடன் சில சாதாரண காரியங்களைச் செய்வார்கள்.

இது ஒரு வகை மனநோயின் வெளிப்பாடாகவே வருகிறது. இது தூக்கத்தில் தோன்றும் கனவு நிலையில் சாத்தியப்படுகிறது.

எப்படி? கனவு என்பது நம் ஆழ்மனதில் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிறைவேறா ஆசைகளின் வடிகாலாக அமைகிறதோ, அந்த மாதிரியே ஆழ்மனதில் நீண்ட காலமாகப் பதிந்திருக்கும் கசப்பான அனுபவங்கள், எண்ணங்கள், ஆசைகள், ஆவேச உணர்ச்சிகள் போன்றவற்றை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சிதான் துயில்நடை.

தூக்கத்தில் நடப்பதற்கும் அந்த கணத்தில் அவர் காணும் கனவுக்கும் தொடர்புண்டு. கனவில் தோன்றும் உணர்வுளுக்கு ஏற்ப அவர் அசைவு கொடுக்கிறார். துயில் நடை ஓரிரு நிமிடங்கள்தான் நீடிக்கும்.

அதற்குள் அவர் சுயநினைவுக்கு வந்து விடுவார். ஆனால் நடந்தது, செய்த செய்கைகள் எதுவுமே அவருக்கு ஞாபகமிருக்காது. பகலில் சிறிது நேரம் தூங்கினால் இரவில் அவ்வளவாகத் துயில்நடை வருவதில்லை என்று அறியப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.

You cannot copy content of this page

Skip to content